- நினைவு நாள்
- சென்னை,
- பெரம்பலூர்
- தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம்
- வேந்தர்
- சீனிவாசன்
- தனலட்சுமி அம்மையார்
- தினம்
சென்னை, ஜூலை 21: பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் மனைவி தனலட்சுமி அம்மையார் 24ஆம் ஆண்டு நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது. பெரம்பலூர்- துறையூர் சாலையில் கல்லூரி வளாகத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் சீனிவாசன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். கல்லூரிவளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. நிகழ்ச்சியில் தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமங்களின் துணைத் தலைவரும், மண்ணச்சநல்லூர் தொகுதி எம்எல்ஏவுமான கதிரவன், அனந்தலட்சுமி கதிரவன், தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக்கலூரி நிர்வாக இயக்குனர் நிவானி கதிரவன், செயலர் நீலராஜ், இயக்குநர்கள் ராஜபூபதி, மணி, நிதி அலுவலர் ராஜசேகர், புது நடுவலூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி நீலராஜ், மண்ணச்சநல்லூர் தி.மு.க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
The post நினைவு தினம் அனுசரிப்பு appeared first on Dinakaran.